வெள்ளி, மார்ச் 01, 2013

இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியுள்ளது !

எண்ணத்திற்கும்  செயலுக்கும் எப்போதுமே இடைவெளி இருந்து தான் வந்திருக்கிறது. எண்ணத்தின் வேகம் அளவிடற்கரியது , ஆனால் செயல் புரியத் தொடங்குவதற்குள் எப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது !

-'எண்ணித் துணிக கருமம்' என்றார் திருவள்ளுவர். 'கருமம்' இன்னதென்றே புரிபடாத நிலையில் என்னத்தை எண்ணுவது போங்கள் !

ஒரு யாஹூவையோ ஒரு கூகுளையோ ஆரம்பிக்குமுன் அவர்கள்  எப்படி எண்ணியிருக்க முடியும், அடுத்த பத்தாண்டுகளில் என்னவாக நிலைக்க  வேண்டும் என்று? நாம் ஒன்று செய்தால் போட்டியாளர்கள்  இன்னொன்று செய்கிறார்கள். நாம் என்ன கருவியை ஏந்திப் போராட வேண்டும் என்பதை நமது எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று பழமொழி இருக்கிறதல்லவா!

மைக்ரோசாப்ட் தொடங்கியபோது விண்டோஸ்-85 தானே மிகப் பெரிய வணிக உத்தியாகத் தோன்றியது. ஆனால் இண்டர்நெட்டை  ஒட்டித் தான் நாளைய உலகம் இயங்கப் போகின்றது, அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பில் கேட்ஸ் முடிவு செய்த பிறகல்லவா, மைக்ரோசாப்ட் மறு உயிர்ப் பெற்றது!

கம்ப்யூட்டர் வன்பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட அமெரிக்கக்  கம்பெனிகளில் இன்றுவரை தொடர்ந்து இயங்குபவை எத்தனை? கொரியாவுக்கும் சீனாவுக்கும் அடங்கித்தானே வன்பொருள் வளர்ச்சி இன்று நடைபெற முடியும்? எண்ணாமல் துணிந்தவர்களா இவர்களெல்லாம்?
*********
(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக