நற்றிணை பதிப்பகம் உலகத் தரத்தில் நூல் வெளியிடும் தமிழக நிறுவனங்களில் ஒன்று. ஜனவரி 2013 புத்தகக் காட்சியில் வண்ணநிலவனின் "ரெய்னீஸ் ஐயர் தெரு" என்னும் 96 பக்க நூலை ரூ. 70 கொடுத்து வாங்கினேன் என்றால் அதற்கு நற்றிணையின் பெயர் தான் முதல் காரணம்.
சுமார் 110 நூல்கள் வாங்கிஇருந்ததால்(6000 ரூபாய்க்கு மேல்!) மூட்டையிலிருந்து இந்த நூலை நேற்று தான் கையிலெடுக்கமுடிந்தது. என்ன தான் சொல்ல வருகிறார் வண்ணநிலவன்
என்பது இடையிடையே புரியாமல் போய் விடுவதால், ஒரே எடுப்பில் முடிக்க முடியவில்லை. ஒரு வழியாக மனதைப்
பயமுறுத்தியும் வலியுறுத்தியும் அடித்துப் பிடித்ததில் இன்று 93 பக்கங்கள் முடித்து விட்டேன். (கடைசி 3 பக்கங்கள் விளம்பரங்களே).