“பூமியில்
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து நல்லவர்கள் துன்பமடைகிறார்களோ அப்பொழுதெல்லாம்
அவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நான் அவதாரம் எடுக்கிறேன்” என்று
கீதையில் கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான்.
அதன்படி, கலியுகத்தில்
‘கல்கி’ அவதாரம் வரும் என்ற நம்பிக்கையில்
காத்திருந்த மக்களிடம், “நானே கல்கி” என்று பெருத்த விளம்பரத்துடனும் அப்போதைய
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவுடனும் ஒரு பெரியவர் தம்பதி சமேதராய்
அழகான ஆங்கிலத்தில் பேசி, ஞாயிறுதோறும் தொலைக்காட்சிகளில் அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் பெற்றதை மறந்திருக்க
மாட்டீர்கள்.
கிறித்தவ மதத்திலும்
இந்த நம்பிக்கை உண்டு. ‘ஏசு வருகிறார்’ என்று பல சுவர்களில் எழுதியிருப்பதைச்
சென்னை மின்சார ரயிலில் பயணிப்பவர்கள் அடிக்கடி பார்க்கமுடியும்.
