இன்று ஜான்ஸன் நூலகத்திற்கு (ஹேக்கன்ஸாக், நியுஜெர்சி) சென்ற பொழுது
திபெத்தின் முன்னாள் அதிபரும், புத்தமதத் தலைவருமான மதிப்பிற்குரிய தலாய் லாமா
அவர்களைப் பற்றிய இரண்டு புதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன.
மதம் என்ற ஒன்றை அவர் தனது உரைகளில் எங்குமே தொடவில்லை. ஞானத்தின் குறிக்கோள்,
கருணையே என்கிறார். எவனொருவன் தன்னிலும் கீழானவனுக்கு இரக்கம் காட்டுகிறானோ அவனே
மனிதன். அவனே இறைமையைப் புரிந்துகொண்டவன் என்கிறார். இதயத்தைத் திறந்து வைத்தால்
இன்பமும் திருப்தியும் கொண்ட வாழ்க்கையைப் பெறுவது அனைவருக்கும் இயலும் என்கிறார்.
முதலாவது நூல் - “கருணையென்னும் ஞானம்”
‘The
Wisdom of Compassion’ by Victor Chan - 2012 River Head Books
இந்த நூல், தலாய் லாமாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதாகும்.
அறிஞர்களுடனும், மாணவர்களுடனும் அமெரிக்க, இந்தியா, கனடா, அயர்லாந்து முதலிய
நாடுகளில் அவர் பங்குபெற்ற உரையாடல்களின் சிறப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன.
மதம் என்ற ஒன்றை அவர் தனது உரைகளில் எங்குமே தொடவில்லை. ஞானத்தின் குறிக்கோள்,
கருணையே என்கிறார். எவனொருவன் தன்னிலும் கீழானவனுக்கு இரக்கம் காட்டுகிறானோ அவனே
மனிதன். அவனே இறைமையைப் புரிந்துகொண்டவன் என்கிறார். இதயத்தைத் திறந்து வைத்தால்
இன்பமும் திருப்தியும் கொண்ட வாழ்க்கையைப் பெறுவது அனைவருக்கும் இயலும் என்கிறார்.