வியாழன், அக்டோபர் 03, 2024

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி -2024

அன்பு நண்பர்களே, 

சில மாதங்கள் முன்பு, என் தாயார்  ஸ்வர்ணாம்பாள் யக்யஸ்வாமி அவர்கள் நினைவாக இலக்கிய விருதுகள் ஏற்பாடு செய்யவிருப்பதாகச் சென்னையில் ஒரு நிகழ்வில்  அறிவித்திருந்தேன்.  ஆனால்  உடனே நான் அமெரிக்கா செல்லவேண்டி நேர்ந்ததால்  மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இப்போது அத்திட்டம் உருவம் பெற்று விட்டது. 

படிபடியாகப் பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.  முதல் முயற்சியாக, 2024 ஆம் ஆண்டிற்கான  தமிழ்ச்  சிறுகதைப் போட்டி நடத்த வேண்டும் என்று முடிவாகியுள்ளது. 

இந்த ஆண்டிற்கான மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000 (ஐம்பதாயிரம்) ஆகும்.  இது, ஒரு சிறுகதைக்கு ரூ.5000 வீதம் 10 கதைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். 

என் அன்புத் தாயார் 14-9-1993 அன்று  சென்னையில் ஒருவாரம் உடல்நலம் குன்றியபின்  இயற்கை மரணம் எய்தினார். அவருடைய ஆசியுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். 

********************************************************************* 

**********************************************************************


அதிகப்படியான விவரங்கள் பின்வருமாறு:

1. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு சிறுகதைகள் அனுப்பலாம். மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். கடைசித் தேதி: 30-11-2024.  

2. கூடுமானவரையில் ஒற்றுப்பிழைகளின்றி இருக்குமாறு சரிபார்த்து அனுப்பவும்.  

3. கருத்தில் புதுமை இருப்பது அனைவருக்கும் பிடிக்கும்தானே!  யார் மனதையும் புண்படுத்தாதவண்ணம் இருப்பதும் அவசியம் அல்லவா? 

4. வட்டார வழக்குச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் அதிகம் கலவாத மொழிநடையையே உலகளாவிய தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

5. உலகின் எந்தப் பகுதியிலிருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப்  புலம்பெயர்ந்தவர்களும் கலந்துகொள்ளுமாறு  அன்போடு வேண்டுகிறோம். அந்தந்தப் பகுதிகளின் சமுதாயப் பின்னணியைக் களமாகக் கொண்ட எழுத்துக்கள்  தமிழ்நாட்டில் பெரிதும் விரும்பப்படுகின்றன. 

6. வயதோ, பாலினமோ  தடையில்லை.  கல்லூரி மாணவர்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டுகிறோம். மூத்த எழுத்தாளர்களும், ஏற்கெனவே பிற பரிசுகளை வென்றவர்களும் கலந்துகொண்டு எம்மைக் கௌரவப்படுத்துமாறு எதிர்பார்க்கிறோம். 

7. சிறந்த நடுவர்களைக் கொண்டு கதைத்தேர்வு நடைபெறும்.  

8. பரிசுக்குத் தேர்வுபெற்றவர்களுடன் நேரடியாகவோ, ஜூம் வழியாகவோ, மூத்த எழுத்தாளர்களைக் கொண்டு பேட்டி  நடத்தப்பட்டு, அதன் கட்டுரையாக்கமும்  அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும். 

9. சிறுகதைத் தொகுப்பின் பத்துப் பிரதிகள் பரிசு பெற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும். 

9. சிறந்த முறையில் பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெறும். சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற மூத்த எழுத்தாளர்களைக் கொண்டு பரிசுகள் வழங்கப்படும்.    

10. ஏதேனும் ஐயம் இருப்பின், award.swarnatrust@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். 

வலைப்பதிவு நண்பர்கள், இந்த அறிவிப்பைத் தங்கள் தளங்களில் பகிர்ந்துகொண்டு தங்கள் வாசகர்களிடம் கொண்டுசெல்ல வேண்டுகிறோம். 

(இது முழுக்க முழுக்க எனது சொந்த வருமானத்திலிருந்து நடத்தப்படுவதாகும். யாரிடமிருந்தும் நன்கொடை பெறுவதில்லை.) 

-  இராய செல்லப்பா நியூஜெர்சி

3 கருத்துகள்:

  1. அன்னையைப் போற்றும் உங்களை போற்றுகிறேன்.  உங்கள் அன்னையை மனதார பணிகிறேன்.  போட்டி சிறக்கவும், நண்பர்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் அன்னையின் நினைவாக நடத்தப்படும் சிறுகதை போட்டி - நல்லதொரு விஷயம். பாராட்டுகள்.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறப் போகும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு