‘கவிக்கோ’ என்று அன்போடு
அழைக்கப்படும் முன்னாள் ‘வானம்பாடி’க் கவிஞரான அப்துல் ரகுமானின் கவிதைப்படைப்பு,
“தேவகானம்”. வழக்கமான அவரது புதுக்கவிதைப் பாணியிலிருந்து விலகி, முழுதும்
மரபுக்கவிதையாலான 356 விருத்தங்கள் இடம் பெற்றுள்ள நூல்.
ரகுமான் இதுவரை காதலைப் பாடினார். கவலைகளைப் பாடினார். ‘ஆலாபனை’
செய்தார். அகாதெமி விருது பெற்றார். இப்போது கடவுளைப் பாட முனைந்து இந்த நூலைப்
படைத்திருக்கிறார். இளமையில் காதலும் முதுமையில் ஆன்மிகமும் இயற்கையின் வரமல்லவா?
“இளமையில் சிவவாக்கியர் பாடல்களைப் படித்தபோது அவற்றில் ஏதோ
ஓர் ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். அந்த ஈர்ப்பு பாடல்களின் கருத்தில் மட்டுமல்ல,
யாப்பிலும் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் கவிஞர். ஆரம்பப் பாடலைப் பாருங்கள்: