(பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)
அன்று மாலை பெரிய ஏரிக்கரையின் நான்காவது படிக்கட்டில் அமர்ந்துகொண்டோம்.
நேற்றை விட இன்று அதிக மென்மையாகவும் இனிமையாகவும் வீசியது காற்று. வறுத்த
நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டே பேசினோம்.
ஒரே மாதத்தில் ஐம்பது ரூபாய் சேர்ந்துவிடும் என்று தோன்றியது. அப்படியானால்
அதற்கடுத்த மாதத்தில் முதல் புத்தகம் வெளிவந்துவிடும்! கூப்பிடும் தூரத்தில்
அல்லவா வெற்றி காத்திருக்கிறது! இப்படிப்பட்ட செயல்திறனுள்ள ஒருவன் எனக்கு
நண்பனாகக் கிடைக்க நான் எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும்!