வெள்ளி, மார்ச் 01, 2013

சுஜாதா நினைவு நாள் - பிப்ரவரி 27


தமிழில் மறக்கமுடியாத வகையில் உரைநடை செய்தவர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் என்றால் என்னை பொறுத்த வரியில் இவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்:

1.கல்கி
2.தி ஜானகிராமன்
3.தமிழ்வாணன்
4.கண்ணதாசன்
5.சுஜாதா

இளமையில் திராவிட மாயைக்கு உட்பட்டிருந்தபோது அறிஞர் அண்ணா,  கருணாநிதி  மற்றும் அவர்களின் அடுக்கு மொழி கூட்டணியும் தமிழ் உரைநடைக்குப் பெரும் தொண்டு புரிந்ததாக ஒரு பிரமிப்பு இருந்தது. ஒரு தலைமுறைக்குப பின் அமைதியாகச் சிந்திக்கும்பொழுது  அது வெறும் பிரமிப்பு தான் என்பது தெளிவாகிறது.

கடந்த 25 வருடங்களாகத் தமிழை சுஜாதா பாதித்த மாதிரி வேறு எழுத்தாளர்கள் பாதித்திருப்பார்களா என்றால் விடை இல்லை. தமிழையே புதிதாக எழுதியவர் சுஜாதா என்று சொன்னது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

புதிதாகப் படிப்பவர்களுக்கு  சுஜாதாவை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் என் சிபாரிசு கீழ்க்கண்ட நாலு சிறுகதைகள்: 

1. 'நகரம்' - சிறுகதை: மதுரையில் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வரும் ஒரு கிராமத்துப் பெண்மணி எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார் என்பதை நெஞ்சைத் தொடும் வகையில் சுஜாதா விவரிக்கும் கதை.

2. 'பத்து லட்சம் புத்தகங்கள்' - சிறுகதை: இலங்கைக்காக  நீலிக்கண்ணீர் வடிக்கும் அறிவுஜீவிகளைப்  பற்றிய அற்புதமான சிறுகதை.

3. 'முதல் மனைவி ' - சிறுகதை: சுஜாதா என்றாலே நினைவுக்கு வரும் கதை இது. சராசரி மனிதர்களின் உணர்ச்சிகளைப்  படம் பிடித்துக் காட்டுவதில் இந்தக் கதைக்கு இணையில்லை.
4. 'காகிதச் சங்கிலிகள் ' - சிறுகதை: யார் இரவல் சிறுநீரகம் கொடுப்பது என்று சர்ச்சை செய்து கொண்டிருக்கும் போதே நோயாளி இறந்து போகிறார். 'ஐயோ, போய் விட்டாரே, நான் கொடுப்பதாய் இருந்தேனே' என்று பின்னல் புலம்புகிரரகள், நெருங்கிய உறவினர்கள். மனித உறவுகளை இதை விடவும் ஆழமாகத்  தோண்டிப் பார்க்கும் கதை வேறு உண்டா?

இதன் பிறகு, 'நைலான் கயிறு', 'கரையெல்லாம் செண்பகப்பூ'
என்ற இரண்டு நாவல்களைச் சொல்லலாம்.
*********

(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

1 கருத்து:

  1. அழகான உங்கள் உழைப்புக்கு என் வாழ்த்துக்ள். பெரும்பாலான பதிவுகளை படித்து முடித்து விட்டேன். நன்றி

    பதிலளிநீக்கு